ஐஸ்வர்யாராய் – அபிஷேக்பச்சன் ஜோடியின் ஒவ்வொரு அசைவையும் ‘பாலிவுட்’ பட உலகம் கண்காணித்து வருகிறது. குழந்தை ஆரத்யாவை பராமரிப்பதற்காக ஐஸ்வர்யாராய் 4 ஆண்டுகளாக நடிப்புக்கு விடுமுறை விட்டு இருந்தார். சமீபத்தில் மீண்டும் நடிக்கத் தொடங்கினார்.
‘ஜாஸ்பா’ என்ற இந்தி படத்தில் வக்கீல் வேடத்தில் நடித்து இருக்கிறார். இந்த நிலையில், ஐஸ்வர்யாராயின் தனிப்பட்ட விஷயங்களில் அவரது மாமியார் ஜெயாபச்சன் தலையிட்டதாகவும், தனது தாய்க்கு ஆதரவாக ஐஸ்வர்யாராயுடன் அபிஷேக்பச்சன் சண்டை போட்டதாகவும் மும்பை பட உலகில் தகவல் பரவியது.
இதுகுறித்து அபிஷேக்பச்சன் கூறியதாவது:– எங்கள் இடையே எந்த சண்டையும் இல்லை. அது வீண் புரளி. எப்போதாவது எனக்கும் ஐஸ்வர்யாவுக்கும் சிறு வாய் தகராறு வந்தால் எனது அம்மா ஜெயாபச்சன் அவரது மருமகளுக்கு ஆதரவாகத்தான் பேசுவார்.
என் அப்பாவும், ஐஸ்வர்யாவும் என்னைப் பற்றி பெங்காலி மொழியில் பேசிக் கொள்வார்கள். அது எனக்குப் புரியாது. என் அம்மா வங்காளத்தை சேர்ந்தவர். அவருக்கும் அந்த மொழி தெரியும். எனக்கு அது புரியாது. அப்பா, அம்மா இருவரும் நாங்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதில் அக்கறை கொண்டவர்கள். எங்களிடம் எந்த பிரச்சினையும் இல்லை. அது வெறும் புரளி என்று கூறினார்.