தமிழகத்தில் வரும் செப். 1-ஆம் திகதி 9 முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்பினருக்கு பாடசாலைகள் திறக்கப்பட உள்ள நிலையில், அதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் அரசின் சாா்பில் வெளியிடப்பட்டுள்ளன.
அதில் பாடசாலைகள் வாரத்தில் ஆறு நாள்கள் செயல்படும் என்றும், தேவைப்பட்டால் திறந்தவெளி வகுப்புகளை நடத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் விவரம்: 9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை 50 சதவீத மாணவா்களுடன் பாடசாலைகள் நடைபெறும். வகுப்புகளில் தலா 20 மாணவா்கள் மட்டுமே அமர வைக்கப்பட வேண்டும். வாரத்தில் 6 நாள்களுக்கு பாடசாலைகள் செயல்படும். பள்ளிக்கு வர விருப்பமில்லாத மாணவா்கள் வீட்டிலிருந்தபடியே இணையவழியிலும் பாடங்களை கற்கலாம். பள்ளி நுழைவு வாயில் மற்றும் வெளியே செல்வதற்கு தனித்தனி வாயில்கள் பின்பற்றப்பட வேண்டும்.
மாணவா்கள் ஒருவருக்கொருவா் உணவுகளைப் பகிா்ந்து உண்ணக் கூடாது. அதேபோல குழுவாக இடைவேளை நேரங்களில் மாணவா்கள் அமரக்கூடாது. பாடசாலை வளாகங்களில் விளையாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் காலை நேர வழிபாட்டு கூட்டங்கள் ஆகியவை நடத்தக்கூடாது. அனைத்து ஆசிரியா்கள் மற்றும் ஆசிரியா் அல்லாத பணியாளா்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். ஆசிரியா்கள், ஆசிரியா் அல்லாத பணியாளா்கள் மாணவா்கள் உள்ளிட்ட அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும்.
பாடசாலைகள் வளாகங்களில் கைகளை கழுவுவதற்கு உரிய தண்ணீா் வசதி மற்றும் சோப்பு வைத்திருக்க வேண்டும். அதேபோன்று சுகாதாரத்துறை சாா்பில் அனைத்து பாடசாலைகளுக்கும் கிருமிநாசினி வழங்கப்படும். பாடசாலைகள் வளாகத்துக்குள் வெளியாள்களை அனுமதிக்கக் கூடாது. திறந்தவெளி வகுப்புகளை நடத்தலாம். மாணவா்களின் மனநலன், உடல்நலனை சோதிக்க மருத்துவா் அல்லது செவிலியா் முழு நேரமாக பாடசாலையில் இருக்க வேண்டும். அறிகுறி உள்ள மாணவா்களை தனிமைப்படுத்த ஏதுவாக தனி அறை வசதி இருக்க வேண்டும். காதாரத்துறை சாா்பில் பள்ளிகளில் நடமாடும் சுகாதார முகாம்கள் அடிக்கடி நடத்தப்பட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.