சில நிமிடங்களுக்கு முன்தான் திருமணம் முடிந்தது. இந்த அற்புத நாளில் தலியன் நகரின் கடற்கரை ரிசார்ட்டில் தன் கணவருடன் சேர்ந்து விதவிதமான போஸ்களில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார் சீனாவைச் சேர்ந்த கோ யுவான்யுவான். திடீரென அந்த கடற்கரையில் மூழ்கி ஒருவர் உயிருக்கு போராடுவதைப் பார்த்து பதட்டத்துடன் அங்கு ஓடினார்.
கடலில் விழுந்து மூச்சுத்திணறியதில் அந்த நபருக்கு மாரடைப்பு ஏற்பட்டுவிட்டது. செவிலியரான கோ சற்றும் தாமதிக்காமல் மணக்கோலத்திலேயே அவரை கடற்கரைக்கு கொண்டு வந்து முதலுதவி செய்து அவரைக் காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதிக்கச் செய்தார்.
இவர் செய்த காரியம் வீடியோ மற்றும் புகைப்படங்களாக பேஸ்புக் மற்ரும் சீனாவின் சமூக வலைதளமான வெய்போவிலும் வைரலாகப் பரவியதையடுத்து, இதைப் பார்த்து நெகிழ்ச்சியடைந்த சீனர்கள் இவரை ‘சுய்மெய்க்சின்னியாங்’ என்று பாசத்தோடு அழைக்கின்றனர். இதற்கு “ அற்புத அழகு கொண்ட மணப்பெண்” என்று அர்த்தம்… சரிதானே……..
இதோ அந்த வீடியோ: