பெண்கள் தங்களை ஏமாற்றிவிட்டதாக, துரோகம் செய்துவிட்டதாக உலகம் முழுவதும் உள்ள ஆண்கள் புலம்புவது வாடிக்கையானது. ஆனால், ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட ஆய்வு இதற்கு நேர்மாறான முடிவை தந்துள்ளது.
சமீபத்தில் மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம் ஆண்களிடம் ஒரு ஆய்வை மேற்கொண்டது. ஆய்வுக்கு தேர்வு செய்யப்பட்ட ஆண்களிடம் முகத்தை மட்டும் கொண்ட ஒரு ஜோடி புகைப்படங்கள் கொடுக்கப்பட்டது. அதில், ஒரு பெண் ஏற்கனவே ஆண்களை ஏமாற்றியவர், மற்றொருவர் மிகவும் விசுவாசமான பெண். இதில் எந்த பெண் ஆண்களுக்கு துரோகம் செய்யக் கூடியவர் என்று ஆய்வுக்கு தேர்வு செய்யப்பட்ட ஆண்களிடம் கேட்கப்பட்டது. சில வினாடிகள் மட்டுமே புகைப்படததை பார்க்க அனுமதிக்கப்பட்டது.
ஆச்சரியப்படும் விதமாக பெரும்பாலானவர்கள் மிகச் சரியாக, எந்த பெண் ஆண்களுக்கு துரோகம் செய்யக் கூடியவர் என்பதை கூறிவிட்டனர். புகைப்படத்தில் இருக்கும் பெண்களின் முகத்தில் தெரியும் உணர்ச்சிகளின் அடிப்படையிலேயே சரியான பெண்களை கண்டுபிடித்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அப்படியென்றால் பெண்கள் தங்களை நம்பவைத்து ஏமாற்றிவிட்டதாக ஆண்கள புலம்புவதை (முக்கியமாக தமிழ் சினிமாவில்) என்னவென்று சொல்வது?