விஜய் டி.வி.யில் விறுவிறுப்பாகச் சென்றுகொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா தொடர் முடியப் போகிறதா?
தொலைக்காட்சித் தொடர்களில் அடுத்தது என்ன என்ற எதிர்பார்ப்பில் ஒவ்வொரு நாளும் பார்வையாளர்களைக் காத்திருக்க வைக்கும் மிகச் சில தொடர்களில் ஒன்று பாரதி கண்ணம்மா.
தற்போது சென்றுகொண்டிருக்கும் கதையின் போக்கிலேயே சென்றால்கூட இன்னும் சில ஆண்டுகளுக்குக்கூட இந்தத் தொடரை விறுவிறுப்பு குறையாமல் வளர்த்துச் செல்ல முடியும்.
தொடரும் அப்படிதான் சென்றுகொண்டிருக்கிறது.
தனக்கு இரண்டாவதாகவும் ஒரு குழந்தை பிறந்திருக்கிறது என்பதில் உறுதியாக இருக்கும் கண்ணம்மா, இன்னொரு குழந்தை பற்றிய தகவலை அறிந்துகொள்வதற்காக வெண்பாவின் வலையில் விழ நேரிடுகிறது.
பாரதிக்குத் தெரியாமல் கண்ணம்மா வீட்டுக்குச் சென்று அவர் இல்லாத நேரத்தில் லட்சுமிக்குச் சமையல் எல்லாம் செய்துபோட்டுவிட்டு வந்த சௌந்தர்யாவும் அவருடைய கணவரும் எக்குத்தப்பாக பாரதியிடம் சிக்கிக் கொண்டிருக்கின்றனர்.
இவ்வாறாக கதையின் போக்கில் அடுத்தடுத்த முடிச்சுகள் உருவாகிக் கொண்டிருக்க, திடீரென தற்போது வெளியிடப்பட்டுள்ள ப்ரமோவில் ஆல் ஆஃப் ஏ சடன், பாரதிக்கு ஞானோதயம் பிறப்பதாகவும் கண்ணம்மாவுடன் சேர்ந்து வாழ விரும்புவதாகப் பெற்றோரிடம் கூறுவதாகவும் உரையாடல்கள் இடம் பெற்றுள்ளன.