செய்திகளைப் பரிமாறும் செயலிகளில் ஒன்றான ‘சிக்னல்’ செயலி செப்-26 செயலிழந்ததைத் தொடர்ந்து நேற்று திங்கட் கிழமையும் அதன் செயல்தளம் முடங்கியிருக்கிறது.
தொழில்நுட்பக் காரணங்களால் சில சமயங்களில் செயலிகள் செயலிழப்பது வாடிக்கையானது தான் என்றாலும் ‘சிக்னல்’ போன்ற பிரபல செயலிகளின் பயன்பாடு அதிகம் என்பதால் பயனாளர்கள் ஏமாற்றம் அடைகிறார்கள்.
இதுகுறித்து சிக்னல் தரப்பில் , ‘வாடிக்கையாளர்கள் சிறிது நேரம் காத்திருங்கள். தொழில்நுட்பக் காரணங்களால் ஏற்பட்ட பிரச்னையை சரி செய்து வருகிறோம்’ எனத் தெரிவித்திருக்கிறார்கள்.
செய்திகள் மட்டுமல்லால் புகைப்படங்கள், விடியோக்கள், குரல் வழிப் பதிவுகள் எனப் பல வசதிகளை சிக்னல் செயலி கொண்டிருக்கிறது.
உலகம் முழுவதும் பயன்பாட்டில் இருந்து வரும் இச்செயலி நேற்று முதல் இந்தியா, அமெரிக்கா, ஜெர்மனி, நியூசிலாந்து, பிரேசில் மற்றும் பல்வேறு நாடுகளில் செயலிழக்கத் தொடங்கியது.
இந்நிலையில் விரைவில் பழைய நிலைக்கு சிக்னல் திரும்பும் என பயனாளர்கள் டிவிட்டரில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.