தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஆண்ட்ரியா. இவரது நடிப்பில் தற்போது அரண்மனை 3, பிசாசு 2 திரைப்படங்கள் உருவாகியுள்ளது. இப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது.
நடிகை ஆண்ட்ரியா சமூக வலைத்தளத்தில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருவார். இவர் வெளியிடும் புகைப்படத்திற்கு ஏகப்பட்ட லைக்குகள் குவியும். இந்நிலையில் தற்போது தான் குட்டி பாப்பாவாக இருந்தபோது எடுத்த புகைப்படத்தை ஆண்ட்ரியா பதிவு செய்து இருக்கிறார்.
மேலும் ’நான் குட்டி பிசாசாக இருந்தபோது எடுத்தது’ என்று அந்த புகைப்படத்திற்கு கேப்ஷனாக பதிவு செய்து இருக்கிறார். இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் ஏகப்பட்ட லைக்குகளை குவித்து வருகின்றனர்.