விஜய் தொலைக்காட்சியில் நிறைய ஷோக்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் முக்கியமான ஒரு நிகழ்ச்சி Mr&Mrs Chinnthirai. பிரபலங்கள் தங்களது நிஜ வாழ்க்கை துணையுடன் இந்த போட்டியில் கலந்துகொண்டு வருகின்றனர்.
மிகவும் ஜாலியாக அதேசமயம் கடுமையான போட்டிகளுடன் நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கிறது.
இந்நிகழ்ச்சி ஆரம்பிக்கும் போது தொகுப்பாளர்களாக அர்ச்சனா மற்றும் மாகாபா ஆனந்த் இருவரும் இருந்தார்கள். பின் தொகுப்பாளினி அர்ச்சனாவிற்கு மூளையில் திடீரென சர்ஜரி நடக்க அவருக்கு பதிலாக மணிமேகலை தொகுத்து வழங்கி வந்தார்.
இப்போது மீண்டும் அர்ச்சனா நிகழ்ச்சிக்கு தொகுப்பாளினியாக வந்துவிட்டார் என தெரிகிறது. காரணம் இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்றிருக்கும் ஜேக் அன் ரோஷினி தங்களது இன்ஸ்டா பக்கத்தில் அர்ச்சனாவுடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு அர்ச்சனா ஈஸ் பேக் என பதிவு செய்துள்ளனர்.