மலையாள திரையுலகின் பிரபல நடிகையான பாவனா தமிழிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
இவரது தந்தை பாலச்சந்திரன் (வயது 59). இவர் புகைப்பட கலைஞராக இருந்தார். கடந்த 21–ந் திகதி இவருக்கு திடீரென ரத்தகொதிப்பு ஏற்பட்டது. உறவினர்கள் உடனடியாக அவரை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டுச் சென்றனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பாலச்சந்திரன் இறந்தார். ஆஸ்பத்திரியில் அவருடன் பாலச்சந்திரனின் மனைவி புஷ்பா, மகன் ஜெயதேவன் மற்றும் பாவனா ஆகியோர் உடனிருந்தனர்.
பாலச்சந்திரனின் இறுதிச் சடங்கு நேற்று மாலை 3.30 மணிக்கு திருச்சூர் பரமேக் காவுவில் உள்ள சாந்திக்காட் மயானத்தில் நடைபெற்றது.