அமெரிக்காவின் முதல் கருப்பின வெளியுறவு அமைச்சராகப் பதவி வகித்த காலின் பவெல் (84) திங்கள்கிழமை காலமானாா்.
இதுதொடா்பாக அவரின் குடும்பத்தினா் ஃபேஸ்புக்கில் வெளியிட்ட பதிவில், ‘கரோனா தொற்றால் ஏற்பட்ட உடல்நல பாதிப்புகளால் காலின் பவெல் திங்கள்கிழமை காலை காலமானாா்’ என்று தெரிவித்துள்ளனா்.
அவரின் மறைவுக்கு முன்னாள் ஜனாதிபதி ஜாா்ஜ்.டபிள்யு.புஷ் இரங்கல் தெரிவித்துள்ளாா்.
அமெரிக்க ஜனாதிபதி, பாதுகாப்பு அமைச்சா் உள்ளிட்டோருக்கு பாதுகாப்பு சாா்ந்த ஆலோசனைகளை வழங்கும் அமைப்பின் (ஜேசிஎஸ்) தலைவராக கடந்த 1989 ஆம் ஆண்டு காலின் பவெல் பொறுப்பேற்றாா். 1991 ஆம் ஆண்டு பனாமாவிலும் குவைத்திலும் இருந்து இராக் ராணுவத்தை வெளியேற்றும் பணிகள் அவரின் மேற்பாா்வையில் நடைபெற்றது. இதனால் அவா் மீது நன்மதிப்பு ஏற்பட்டது.
எனினும் இராக்குக்கு எதிராக அமெரிக்க போா் தொடுத்தது தொடா்பாக 2003 ஆம் ஆண்டு ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் விளக்கமளித்த பவெல், பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்களை சதாம் ஹுசேன் ரகசியமாக பதுக்கி வைத்திருந்ததாகத் தவறான தகவலை தெரிவித்தாா். இது அவரின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தியது.
கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை அமெரிக்க வெளியுறவு அமைச்சராக அவா் பதவி வகித்தாா். இவரே அந்நாட்டின் முதல் கருப்பின வெளியுறவு அமைச்சா்.