சீனாவின் வடக்கு மாகாணங்களில் மீண்டும் அதிகரித்துவரும் கொரோனா தொற்று பரவல் காரணமாக சுற்றுலாத் தலங்களை மூட அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா தொற்று வைரஸ் முதன்முதலில் சீனாவின் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட நிலையில் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் அது பரவியது.
சீனாவில் விதிக்கப்பட்ட தொடர் கட்டுப்பாடுகள் காரணமாக தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் சீனாவின் வடக்கு மாகாணங்களில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
வைரஸ் பரவலைத் தடுக்க ஏற்கெனவே 9 மாகாணங்களில் விமானப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அப்பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தலங்களை மூடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சீனாவின் மங்கோலியா, கன்சூ மற்றும் பெய்ஜிங் பகுதிகளில் பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. சீனாவில் தற்போது இரட்டை இலக்கங்களில் கொரோனா தொற்று எண்ணிக்கை இருந்தாலும் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.