நடிகரும், ‘துக்ளக்’ ஆசிரியருமான சோ ராமசாமி உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், நடிகையும், காங்கிரசின் அகில இந்திய செய்தி தொடர்பாளருமான குஷ்பு, தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் இறந்துவிட்டதாகக் கூறி தவறுதலாக சில மணி நேரங்களுக்கு முன்பு இரங்கல் செய்தி வெளியிட்டார்.
இதனைத் தொடர்ந்து, இணையவாசிகள் அவருக்கு கடும் கண்டனம் தெரிவித்து பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். அவர் உயிருடன் இருக்கிறார் என்றும் குஷ்புவிற்கு பதில் கூறி வருகின்றனர்.
அவர் உயிருடன் இருப்பதை தெரிந்துக் கொண்ட குஷ்பு, அடுத்த ஒரு மணிநேரத்தில் தனது தவறை உணர்ந்து கொண்டு உடனடியாக தனது பதிவிற்கு மன்னிப்பு கோரினார். தன்னுடைய தவறுக்கு ஆயிரம் முறை மன்னிப்பு கேட்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.