ஐதராபாத் பஞ்சார ஹில்ஸ் பகுதியில் உள்ள கமலா குரு காலனியில் வசிப்பவர் சரத்குமார். தெலுங்கு திரைப்பட இயக்குனரான இவர் பல விளம்பர படங்களை இயக்கி உள்ளார். இவருக்கும் சென்சார் குழு பெண் உறுப்பினரும், பேஷன் டிசைனருமான மங்கா ரெட்டிக்கும் இடையே 10 ஆண்டுகளாக பழக்கம் இருந்தது.
இந்த நிலையில் மங்கா ரெட்டி தன்னை இரும்பு கம்பியால் தாக்கியதாக சரத்குமார் பஞ்சாரஹில்ஸ் போலீசில் புகார் செய்தார். தாக்குதலில் காயம் அடைந்த அவர் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
தனது செல்போனில் எடுத்த படத்தை எடிட் செய்து தரும்படி மங்கா ரெட்டி கூறினார். நான் மறுக்கவே என்னை அவர் தனது நண்பர் கிஷன் என்பவருடன் சேர்த்து இரும்பு கம்பியால் தாக்கி காயப்படுத்தினர். மேலும் எனது செல்போனையும் உடைத்து விட்டார்’’ என்று சரத்குமார் போலீசில் அளித்த புகாரில் கூறியிருந்தார்.
ஆனால் இந்த குற்றச்சாட்டை மங்கா ரெட்டி மறுத்தார்.
அவர் கூறும் போது, ‘‘சரத்குமார் எனது செல்போனுக்கு ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பினார். நான் எனது நண்பர் கிஷனுடன் அவரது வீட்டுக்கு சென்று இதுபற்றிக் கேட்டேன். குடி போதையில் இருந்த அவர் என்னை திட்டினார். இதனால் அவரை தாக்கினேன்’’ என்றார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.