‘உள்ளம்’ படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் பிரியாமணி. பாரதிராஜாவின் ‘கண்களால் கைது செய்’ படத்திற்கு பிறகு பிரபலமானார். கார்த்தியுடன் நடித்த பருத்தி வீரன் படத்தில் இவருக்கு தேசிய விருதை பெற்றுக் கொடுத்தது.
அதன்பிறகு தமிழ், தெலுங்கில் நடித்துவந்தார். சமீபகாலமாக பெரிய அளவில் படங்கள் எதுவும் இல்லை. எனவே, தனது மும்பை காதலரை விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளார்.
தற்போது 2 கன்னட படங்களில் நடித்து வரும் பிரியாமணி, தெலுங்கில் திருவிக்ரமன் இயக்கும் ‘பன்னி’ படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட சம்மதித்து இருக்கிறார். இதுபற்றி அறிந்த ஒரு நிருபர், ‘‘இப்படி ஒரு பாடலுக்கெல்லாம் குத்தாட்டம் போட சம்மதிப்பது ஏன்? எப்படியாவது சினிமாவில் முகம் காட்ட வேண்டும் என்பதற்காக ‘ஓகே’ சொல்லி விட்டீர்களா?’’ என்று கேட்டதுதான் தாமதம். அந்த நிருபர் மீது சீறிப்பாய்ந்த பிரியாமணி, ‘‘கேள்வி கேட்கும் முன்பு யோசித்து கேளுங்கள்’’ என்று ஆவேசப்பட்டு, நிருபரை உண்டு இல்லை என்று வாட்டி எடுத்து விட்டாராம். ஆவேசம் அடைந்த பிரியாமணி, நிருபரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. பின்னர் ‘சாரி’ சொன்னாராம்.
தெலுங்கில் மார்க்கெட் போய் விட்டது. தேட ஆள் இல்லை. ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போடப்போவது உண்மை. இதை கேட்டால் ஏன் இப்படி ஆத்திரப்படுகிறார்? என்று தெலுங்கு பட உலகில் பரபரப்புடன் பேசிக் கொள்கிறார்கள்.