மிர்ச்சி சிவா, பாபி சிம்ஹா நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘மசாலா படம்’. இப்படத்தை புதுமுக இயக்குனர் லஷ்மண் இயக்கியுள்ளார். இப்படத்தை இசை சமீபத்தில் வெளியாக எல்லா தரப்பு ரசிகர்களின் கவனத்தையும், விமர்சகர்கள், வர்த்தகர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இந்நிலையில், இப்படம் வருகிற அக்டோபர் 9-ந் தேதி வெளியாகவிருக்கிறது. இதை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதற்காக, இப்படம் சமீபத்தில் தணிக்கை குழுவின் பரிசீலனைக்கு சென்றது. படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் கொடுத்துள்ளனர்.
நல்ல தரமான, ஜனரஞ்சகமான படங்களுக்கு மக்கள் மத்தியில் எப்போதுமே வரவேற்பு உண்டு என்பதை ‘மசாலா படம்’ நிரூபிக்கும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இப்படம் சகல வயதினரையும், சகல தரப்பினரையும் கவரும் வண்ணம் உருவாகியுள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.