சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக பிரபல மேற்கிந்தியத் தீவுகள் வீரர் டுவைன் பிராவோ அறிவித்திருக்கிறார்.
மேற்கிந்தியத் தீவுகள் அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான டுவைன் பிராவோ சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார்.
டி20 உலகக் கிண்ண நடந்து வரும் நிலையில் ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி இலங்கையுடன் தோற்றதால் தொடரிலிருந்து வெளியேறியதும் டுவைன் பிராவோ இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.
இது குறித்து அவர் , ‘நேரம் வந்துவிட்டது என நினைக்கிறேன். நிறைய ஏற்றத் தாழ்வுகளுடன் இருந்தாலும் எனது விளையாட்டு வாழ்க்கை மிகச் சிறப்பாக அமைந்தது. கரீபியன் மக்கள் சார்பில் அணியில் இருந்தது மகிழ்ச்சி அளிக்கிறது’ எனத் தெரிவித்திருக்கிறார்.
பிராவோ மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக 85 டி20 போட்டிகளில் விளையாடி 76 விக்கெட்டுகளையும், 1,229 ஓட்டங்களையும் குவித்துள்ளார். 164 ஒருநாள் போட்டிகளில் 2,968 ஓட்டங்களும் 199 விக்கெட்டுகளையும், 40 டெஸ்ட் போட்டிகளில் 2,200 ஓட்டங்களும் 86 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.