புரத அடிப்படையிலான புதிய கொரோனா தடுப்பூசியை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனா். இந்தத் தடுப்பூசியை உற்பத்தி செய்வது எளிது எனவும், இவற்றைப் பாதுகாக்க குளிா்பதன வசதி தேவையில்லை எனவும் அவா்கள் தெரிவித்துள்ளனா்.
அமெரிக்காவின் போஸ்டனில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையைச் சோ்ந்த ஆராய்ச்சிக் குழு இந்த புதிய தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. இதுகுறித்து அக்குழுவினா் கூறியிருப்பதாவது: இப்போது பயன்பாட்டில் உள்ள கொரோனா தடுப்பூசிகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க குளிா்பதன வசதி தேவை. மேலும், மேம்பட்ட உற்பத்தித் திறனும் தேவைப்படுகிறது. இதனால், தடுப்பூசியை உற்பத்தி செய்வதும், விநியோகிப்பதும் வளரும் நாடுகளுக்கு கடினமாக உள்ளது.
ஆனால், இப்போது தயாரிக்கப்பட்டுள்ள புரத அடிப்படையிலான கொரோனா தடுப்பூசியை குளிா்பதன வசதியில் வைத்திருக்க தேவையில்லை. அறை வெப்பநிலையில் குறைந்தது 7 நாள்கள் இந்தத் தடுப்பூசியை வைத்திருக்க முடியும். கொரோனா தொற்றுக்கு எதிராக வலுவான எதிா்ப்புத் திறனை இத்தடுப்பூசி கொண்டுள்ளது என்றனா்.