சச்சின் டெண்டுல்கரின் மனைவி அஞ்சலி இன்று தனது 54-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.
குஜராத்தி குடும்பத்தைச் சேர்ந்த அஞ்சலி மும்பையில் பிறந்தவர். அவருடைய தந்தை ஆனந்த் மேத்தா, ஒரு தொழிலதிபர். தாய், இங்கிலாந்து வம்சாவளியைச் சேர்ந்த அன்னபெல் மேத்தா.
1990 இல் அஞ்சலியைச் சந்தித்த சச்சின் டெண்டுல்கர், 5 வருடங்கள் காதலித்து, 1995 இல் திருமணம் செய்துகொண்டார். மருத்துவரான அஞ்சலி, சச்சினைத் திருமணம் செய்த பிறகு குடும்பத்தைக் கவனித்துக்கொள்வதற்காக மருத்துவத் தொழிலைக் கைவிட்டார். இவர்களுக்கு சாரா என்கிற மகளும் அர்ஜுன் என்கிற மகனும் உள்ளார்கள்.