சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்று புகழடைந்த மாளவிகா சுந்தர், திரைப்படப் பின்னணிப் பாடகியாக உள்ளார்.
தமிழ் உள்பட தென்னிந்திய மொழிகளில் நூற்றுக்கணக்கான திரைப்படப் பாடல்களைப் பாடியுள்ளார்.
சில தினங்களுக்கு முன்பு, 33 வயதில் சரியான காதலைக் கண்டெடுத்தேன் என இன்ஸ்டகிராமில் பதிவு எழுதி தனது வருங்காலக் கணவரை முத்தமிடும் புகைப்படத்தை வெளியிட்டார்.
இந்நிலையில், தொழிலதிபர் அஸ்வின் காஷ்யப் ரகுராமனை சென்னையில் திருமணம் செய்துகொண்டார் மாளவிகா. இந்நிகழ்வில் ஏராளமான பாடகர்கள், சின்னத்திரை நட்சத்திரங்கள் கலந்துகொண்டார்கள். மாளவிகா – அஸ்வினின் திருமணப் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.