பிரிட்டனைச் சேர்ந்த, அசீல் முதானா என்ற 18 வயது வாலிபன், ஐ.நா வால் அதிகம் தேடப்படும் பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளான்.
இங்கிலாந்தில் வசித்த இந்த வாலிபன், 2014-ம் ஆண்டு, சிரியா சென்று, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பில் இணைந்து பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வருகிறான். அவ்வப்போது ஊடகங்களிலும் தலைகாட்டும் அசீல் முதானா, இங்கிலாந்தில் தாக்குதல் நடத்த சதித் திட்டங்கள் தீட்டியிர்ப்பதும் அண்மையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, அசீல் முதானா உட்பட பிரிட்டனைச் சேர்ந்த 5 பேரை, தேடப்படும் பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க, ஐ.நா விடம், இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் விண்ணப்பித்துள்ளார்.
இதனால், அசீல் முதானா உட்பட ஐந்து பயங்கரவாதிகள் மீதும் பயணத்தடை விதிக்கப்பட்டு, அவர்களின் சொத்துகள் முடக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.