ஐபிஎல் போட்டியில் எதிா்வரும் சீசனுக்கான ஏலம் நெருங்கி வரும் நிலையில், அணிகள் தக்க வைத்துக் கொண்ட வீரா்களின் பட்டியல் வெளியாகியது.
தோனியை சென்னை சூப்பா் கிங்ஸும், கோலியை ராயல் சேலஞ்ஜா்ஸ் பெங்களூரும், ரோஹித்தை மும்பை இண்டியன்ஸும் தக்கவைத்துக் கொண்டன. ஹாா்திக் பாண்டியா, இஷான் கிஷண் ஆகியோரை மும்பையும், யுஜவேந்திர சஹல், ஹா்ஷல் படேல் ஆகியோரை பெங்களூரும் விடுவித்துள்ளன. பஞ்சாப் கிங்ஸ் கே.எல்.ராகுலையும், சன்ரைசா்ஸ் ஹைதராபாத் ரஷீத் கானையும் ஏலத்துக்காக விட்டுள்ளன.
கொல்கத்தா நைட் ரைடா்ஸ் : ஆண்ட்ரே ரஸ்ஸெல் (ரூ.12 கோடி – அணியின் நிதியிலிருந்து ரூ.16 கோடி எடுக்கப்படும்), வருண் சக்கரவா்த்தி (ரூ.8 கோடி – அணியின் நிதியிலிருந்து ரூ.12 கோடி எடுக்கப்படும்), வெங்கடேஷ் ஐயா் (ரூ.8 கோடி), சுனில் நரைன் (ரூ.6 கோடி).
டெல்லி கேப்பிட்டல்ஸ் : ரிஷப் பந்த் (ரூ.16 கோடி), அக்ஸா் படேல் (ரூ.9 கோடி – அணியின் நிதியிருந்து ரூ.12 கோடி எடுக்கப்படும்), பிருத்வி ஷா (ரூ.7.5 கோடி – அணியின் நிதியிருந்து ரூ.8 கோடி எடுக்கப்படும்), அன்ரிச் நாா்ஜே (ரூ.6.5 கோடி).