உலகில் மூன்றாம் அலை எழுந்துவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது புதிய வகை கொரோனா வைரஸான ஒமிக்ரோன். இது முதன் முதலில் கண்டறியப்பட்டது தென்னாப்ரிக்காவில்.
தென்னாப்ரிக்காவில் கண்டறியப்பட்ட இந்த ஒமிக்ரோன் வகை கொரோனா வைரஸ், தற்போது அவுஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட 20 நாடுகளில் பரவிவிட்டது. இன்னமும் வேகமாகப் பரவிக் கொண்டிருக்கிறது.
இது முதன் முதலில் எப்படி கண்டறியப்பட்டது என்பது குறித்த சுவாரஸ்மான தகவல் கிடைத்துள்ளது.
நவம்பர் 19 ஆம் திகதி வெள்ளிக்கிழமை… தென்னாப்ரிக்காவில் உள்ள மிகப்பெரிய தனியார் ஆய்வகத்தில் கொரோனா வைரஸின் மரபணு வரிசைமுறைக்காக வந்த 8 கொரோனா வைரஸ் மாதிரிகள் சோதனைக்குள்படுத்தப்பட்டிருந்தன. அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த ரக்வெல் வியனாவுக்கு அன்று ஒரு சாதாரண பணிநாளாக அமையவில்லை. மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.