நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சாரத் தடை காரணமாக கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளுக்கான நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நாடு முழுவதும் திடீர் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
மின் விநியோக கட்டமைப்பில் ஏற்ட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே இவ்வாறு நாடு முழுவதும் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாகவும் மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
எனினும், கொழும்பின் சில பகுதிகளில் தற்போது மின் விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை நாடாளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள மின் தடையை விரைவில் சீர் செய்யப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.