பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கலிபோர்னியாவைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனர் மிர்சியா வோஸ்கெரிகானுடன் செய்து கொண்ட 17 லட்சம் டாலர் ஒப்பந்தத்தை ஜூக்கர்பெர்க் நிறைவேற்றவில்லை என்று குற்றம் சாட்டி இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அமெரிக்காவின் கலிபோர்னியா போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர். இது தொடர்பான விசாரணை விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது. இந்த வழக்கை ஏற்க வேண்டாம் என்று ஜூக்கர்பெர்க் விடுத்த கோரிக்கையை கலிபோர்னியா நீதிமன்றம் மறுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.