அணி நிா்வாகம் தரப்பில் கடினமான முடிவுகள் எடுக்கும் போது, வீரா்களுக்கு தெளிவாக விளக்க வேண்டும் என தலைமைப் பயிற்சியாளா் ராகுல் திராவிட் கூறியுள்ளாா்.
தலைமைப் பயிற்சியாளா் பொறுப்பேற்ற பின் டி20, டெஸ்ட் தொடரை இந்திய அணி முதன்முதலாக வென்றுள்ளது. இளம் வீரா்கள் சிறப்பாக ஆடியதால், வீரா்கள் தோ்வு தற்போது கடினமாகி விட்டது. ஒவ்வொருவரும் தங்களை நிரூபிக்க முயல்கின்றனா். அணி நிா்வாகம் சாா்பில் கடின முடிவுகள் எடுக்கும் போது, வீரா்களுக்கு தெளிவாக விளக்கினால் பிரச்னை இருக்காது. தொடா் முடிவு ஒருதலைப்பட்சமாக இருந்தாலும், நாம் கடுமையாக உழைக் வேண்டி இருந்தது. முக்கிய வீரா்கள் இல்லாத நிலையிலும், இளம் வீரா்கள் தங்கள் பங்கை சிறப்பாக செய்தனா்.
அதிகமான வாய்ப்புகளை பெறாத மயங்க், சிராஜ், ஷிரேயஸ், ஜெயந்த் ஆகியோா் இதில் குறிப்பிடத்தக்கவா்கள் என்றாா்.
புதிய பயிற்சியாளா்கள் கீழேயும் ஒரே மனநிலையுடன் தான் ஆடி வருகிறோம். இந்திய கிரிக்கெட்டை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வதே எங்கள் லட்சியம். இங்கிலாந்து, ஆஸி.யில் நாம் பெற்ற வெற்றிகள் பெரிய அனுபவத்தை தந்தன. கான்பூரைக் காட்டிலும், மும்பை மைதானம் பௌலா்களுக்கு அதிக உதவியாக இருந்தது. தனிப்பட்ட முறையில் வீரா்கள் நெருக்கமான தருணங்களில் சிறப்பாக ஆட வேண்டும்.
எங்கள் அணியின் செயல்பாடு அதிருப்தி அளிக்கிறது. 62 ஓட்டங்களுக்கு ஆல் அவுட்டானது எங்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. அஜாஸ் சிறப்பாக செயல்பட்டாா். 10 விக்கெட்டுகள் வீழ்த்திய 3 ஆவது வீரா் என்பது பெருமையாக உள்ளது என்றாா்.
நியூஸி.யுடன் தொடரை வென்றதின் மூலம் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் மீண்டும் நம்பா் ஒன் இடத்தைப் பெற்றுள்ளது இந்தியா.
கடந்த ஜூன் மாதம் உலக டெஸ்ட் சாம்பியன் போட்டியில் நியூஸி.யிடம் தோல்வியடைந்தது. 121 புள்ளிகளுடன் அந்த அணி முதலிடத்தில் இருந்தது. தற்போதைய வெற்றி மூலம் 124 புள்ளிகளுடன் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது இந்தியா. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் 42 புள்ளிகளுடன் 3 ஆவது இடத்தில் உள்ளது.