உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 28.68 கோடியைக் கடந்துள்ளது. பலி எண்ணிக்கை 54 லட்சத்தை கடந்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா தொற்றின் அடுத்தடுத்த அலைகளினால் ஒட்டுமொத்த பாதிப்பு அதிகரித்த வண்ணமே இருக்கிறது. தொற்றைக் கட்டுப்படுத்த கட்டுப்பாடுகளுடன் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தி வந்ததாலும் தொற்று பாதிப்பு அதிகரித்தே வருகின்றன.
கடந்த மாதம் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரோன் என்ற உருமாறிய கொரோனா தொற்று தற்போது உலகம் முழுவதும் பரவத்தொடங்கி அச்சமடைய வைத்துள்ளது.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 286,875,007 ஆக அதிகரித்துள்ளது. அவா்களில் 5,446,271 போ் உயிரிழந்துள்ளனர்.
மேலும், தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை 253,172,195 போ் பூரண குணமடைந்துள்ளனர். சுமாா் 28,256,541 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 90,208 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
உலகிலேயே மிகவும் மோசமான பாதிப்புக்குள்ளான நாடாக அமெரிக்கா உள்ளது. அங்கு இதுவரை தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 55,252,823 ஆகவும் பலி எண்ணிக்கை 845,745 ஆகவும் உயர்ந்துள்ளது.
இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 34,838,804 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 481,080 பேர் பலியாகியுள்ளனர்.
தொற்று பாதிப்பில் மூன்றாவது இடத்தில் உள்ள பிரேசிலில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22,277,239 ஆகவும் பலிகளைப் பொருத்தவரை 619,024 பேருடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது.
இங்கிலாந்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12,748,050 ஆகவும், பலிகளைப் பொருத்தவரை 148,421 ஆக உள்ளது.
ரஷ்யாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,479,344 ஆகவும், பலிகளைப் பொருத்தவரை 307,948 ஆக உள்ளது.