அமெரிக்காவில் கொரோனா உறுதி செய்யப்படுவோரின் தினசரி எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா தாக்கம் குறைய ஆரம்பித்த நிலையில் ஒமிக்ரோன் தொற்று பரவத் தொடங்கியதும் மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உச்சத்தை அடைந்து வருகிறது.
தற்போது, அமெரிக்காவில் கடந்த 7 நாள்களின் சராசரி கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 4.13 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இதனால், அதிக வேகமாகப் பரவி வரும் கொரோனா தொற்றால் மருத்துவர்கள் திணறி வருகிறார்கள்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. முன்னதாக, கடந்த சனிக்கிழமை 5 லட்சம் பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டது. இது, நாட்டில் இதுவரை இல்லாத அதிகபட்ச தினசரி பாதிப்பு எண்ணிக்கையாகும். இத்துடன், ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 55,552,823 ஆக உயா்ந்துள்ளது.
இதுதவிர, கடந்த 24 மணி நேரத்தில் 1,500 க்கும் அதிகமான கொரோனா நோயாளிகள் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்தனா். இத்துடன், அந்த நோய்க்கு பலியானவா்களின் எண்ணிக்கை 848,745 ஆக உயா்ந்துள்ளது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.