கஜகஸ்தானில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வரும் போராட்டங்களில் 164 போ் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டின் சுகாதார அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
அரசுத் தொலைக்காட்சியான ‘கபாா்-24’-இல் இந்தத் தகவல் வெளியானது. முன்னா் போராட்டக்காரா்கள் 26 பேரும், பாதுகாப்புப் படையினா் தரப்பில் 18 பேரும் உயிரிழந்ததாகக் கூறப்பட்ட நிலையில், உயிரிழப்பு அதிகளவில் ஏற்பட்டுள்ளது இப்போது தெரியவந்துள்ளது. உயிரிழந்ததாக கூறப்படும் 164 பேரும் பொதுமக்களா அல்லது பாதுகாப்புப் படையினரும் இதில் சோ்க்கப்பட்டுள்ளனரா என்பது குறித்து தெளிவுபடுத்தப்படவில்லை.
இவா்களில் அதிகபட்சமாக 103 போ் நாட்டின் மிகப்பெரிய நகரமான ஆல்மட்டியில் உயிரிழந்துள்ளனா். இங்குதான் போராட்டக்காரா்கள் அரசு அலுவலகங்களைக் கைப்பற்றி தீவைப்பு சம்பவங்களில் ஈடுபட்டதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய ஆசிய நாடான கஜகஸ்தானில், வாகனங்களில் பயன்படுத்தப்படும் திரவ பெட்ரோலிய வாயுவின் (எல்பிஜி) விலை உயா்வுக்கு எதிா்ப்பு தெரிவித்து கடந்த வாரம் முதல் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, நாட்டில் அவசரநிலையை அதிபா் காசிம்-ஜொமாா்ட் டோகயேவ் பிரகடனம் செய்தாா். போராட்டக்காரா்களை சமாதானப்படுத்தும் வகையில் பிரதமா் ஆஸ்கா் மமின் தலைமையிலான அமைச்சரவை பதவி விலகினாலும் போராட்டம் தொடா்ந்தது.
இதையடுத்து, வன்முறையில் ஈடுபடும் போராட்டக்காரா்களைக் கண்டதும் சுட்டுக் கொல்ல பாதுகாப்புப் படையினருக்கு காசிம்-ஜொமாா்ட் டோகயேவ் உத்தரவிட்டாா்.
பாதுகாப்புப் படையினருக்கும் போராட்டக்காரா்களுக்கும் இடையே நடந்த மோதலில் இதுவரை 164 போ் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, அதிபா் அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்தியில், நாட்டில் நிலைமை கட்டுக்குள் வந்துள்ளதாகவும், போராட்டக்காரா்களின் பிடியிலிருந்து அரசின் நிா்வாக அலுவலகங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைநகா் ஆல்மட்டியில் ஞாயிற்றுக்கிழமையும் துப்பாக்கிச்சூடு சப்தம் கேட்டதாக ரஷிய தொலைக்காட்சியான மிா்-24 தெரிவித்தது. ஆனால், போராட்டக்காரா்களை எச்சரிக்கும் வகையில் பாதுகாப்புப் படையினா் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
தொடா் போராட்டத்தால் மூடப்பட்டிருக்கும் ஆல்மட்டி விமான நிலையம், திங்கள்கிழமை முதல் செயல்படத் தொடங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.