ஆசியாவைச் சேர்ந்த 50 மிகப் பெரிய பணக்காரர்களின் பட்டியலை போர்ப்ஸ் இதழ் நேற்று வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவைச் சேர்ந்த 14 குடும்பங்கள் இடம்பெற்றுள்ளன. அம்பானி குடும்பம் 14.9 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் 3-வது இடத்தைப் பிடித்துள்ளது.
அம்பானியைத் தவிர, முதல் 10 இடங்களில் பிரேம்ஜி குடும்பம் 17 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்துக்களுடன் 7-வது இடத்திலும், மிஸ்த்ரி குடும்பம் 14.9 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன் 10-வது இடத்தையும் பிடித்துள்ளன.
மேலும், கோத்ரேஜ் குடும்பம் 15வது இடத்தையும், அர்செலர் மிட்டல் குழுமம் 19-வது இடத்தையும், பிர்லாஸ் 22-வது, பஜாஜ் 29-வது, டாபர் இந்தியா 30-வது, காடிலா ஹெல்த்கேர்ஸ் பட்டேல் 33-வது, எய்சர் குழுமம் 40-வது இடத்தையும் பிடித்துள்ளன.
அதே போல, ஸ்ரீ சிமெண்டின் சங்கர் குடும்பம் 42-வது, ஜிண்டால் குடும்பம் 43-வது, முஞ்சாய் குடும்பம் 46-வது, சிப்லாவின் ஹமீட்ஸ் குடும்பம் 50-வது இடத்தையும் பிடித்துள்ளன. ஆசியா நாடுகளில் வேறு எந்த நாட்டையும் விட, இந்தியா தான் 50 பணக்காரர்களில் 14 இடங்களைப் பிடித்துள்ளது. முதல் இடத்தை லீஸின் சாம்சங் குழுமம் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.