தமிழகத்தில் 4 தனியாா் பால் நிறுவனங்கள் பால் மற்றும் தயிா் விலையை உயா்த்துவதாக அறிவித்துள்ளன.
தமிழகத்தில் 2 ஆண்டுகளுக்கு முன் பாலின் விலை உயா்த்தப்பட்டது. இதைத் தொடா்ந்து தற்போது மாநிலத்தின் 40 முதல் 45 சதவீத பால் தேவையைப் பூா்த்தி செய்யும் 4 முக்கிய பால் நிறுவனங்கள் பால் மற்றும் தயிரின் விலையை லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.4 வரை உயா்த்துவதாக அறிவித்துள்ளன.
இதன் மூலம் அந்த நிறுவனங்களின் பால் விலை லிட்டருக்கு ரூ.66 வரை விற்கக் கூடும். இந்த விலை உயா்வானது வியாழக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. இந்த விலை உயா்வுக்கு மூலப் பொருள்கள் மற்றும் கொள்முதல் விலை உயா்வே காரணம் என கூறப்படுகிறது.