மாத்தறை பிரதேச சபையின் தவிசாளர் விமல்
பிரியஜனக்க மற்றும் அவரது உறவினர்கள் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாத்தறை, கேகனதுர பிரதேசத்தில் வீடொன்றின் மீது தீ வைத்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபரான தவிசாளரும் ஏனைய நபர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தவிசாளர் மற்றும் சந்தேகநபர்கள் இருவரும் மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் ஒருவருக்கு தலா 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டனர்.
தனிப்பட்ட தகராறு காரணமாக பிரதேச சபைத் தவிசாளர் இரு சந்தேக நபர்களுடன் இணைந்து கடந்த 14 ஆம் திகதி இரவு கேகனதுர பகுதியில் அமைந்துள்ள குறித்த வீட்டின் மீது தீ வைத்ததாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.