கிரிக்கெட் வீரர் வீராட்கோலி பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை காதலித்து வருகிறார். இவரும் இணை பிரியாத ஜோடியாக இருந்து வந்தனர். கிரிக்கெட் போட்டியை பார்க்க அனுஷ்கா சர்மா செல்வதால், கோலி சரியாக விளையாடவில்லை என்று கூட விமர்சனம் எழுந்தது. என்றாலும், காதலை தீவிரமாக வளர்த்து வந்தனர்.
இந்த ஆண்டு இறுதியில் இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டனர். திருமண தேதியை அனுஷ்கா சர்மா எதிர்பார்த்து காத்திருந்தார். இந்த நிலையில் இந்த ஆண்டு நடத்த வேண்டும் என்று இருந்த திருமண முடிவை கோலி தள்ளி வைத்து விட்டார்.
கிரிக்கெட்டில் அதிக கவனம் செலுத்த விரும்புவதால் திருமணத்தை தள்ளிப்போட்டுள்ளார். ஆனால் அனுஷ்கா சர்மா எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் திருமணத்தை நடத்த வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தார். இப்போது கோலி எடுத்துள்ள முடிவால் அவரது காதலி கோபத்தில் இருக்கிறாராம். இதனால் இருவர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
முக்கிய நிகழ்ச்சிகளுக்கு கோலியுடன் ஜோடியாக செல்லும் அனுஷ்கா சர்மா வருகிற 29–ந்தேதி நடைபெற இருக்கும் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் திருமணத்துக்கு ஜோடியாக வரமாட்டேன் என்று சொல்லி விட்டதாக கூறப்படுகிறது. அதற்குள் காதலியை கோலி சமாதானப் படுத்துவாரா என்பது 29–ந்தேதி தான் தெரியும்.