சீனாவை சேர்ந்த பிரபல நடிகை ஏஞ்சலா யெயுங். இவர் பாடகியாகவும், மாடல் அழகியாகவும் இருக்கிறார். சமீபத்தில் இவருக்கும் நடிகர் ஹுயாங் ஸியோமிங்குக்கும் பெய்ஜிங்கில் திருமணம் நடந்தது.
இவர்களது திருமணம் யாரும் நினைத்து பார்க்க முடியாத அளவில் மிகவும் ஆடம்பரமாக நடந்தது.
இந்த திருமணத்துக்கு ரூ.200 கோடி செலவிடப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. திருமணத்தின் போது குதிரைகள் அடங்கிய குடை ராட்டினம் போன்ற வடிவில் கேக் தயாரிக்கப்பட்டிருந்தது.
அது 10 அடி உயரத்தில் உருவாக்கப்பட்டிருந்தது. அதை அவர்கள் இருவரும் இணைந்து வெட்டினார்கள். நடிகை ஏஞ்சலா யெயுங் பேரிக்காய் வடிவிலான வைர மோதிரம் அணிந்திருந்தார். அது 5 காரட் எடை கொண்டது. அதன் மதிப்பு ரூ.10 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
திருமணத்தின் போது விலை மதிப்புமிக்க திருமண உடையை நடிகை ஏஞ்சலா அணிந்திருந்தார். சுமார் 5 மாதங்களாக அது வடிவமைத்து தயாரிக்கப்பட்டதாகும். திருமண விழாவில் 2 ஆயிரம் பேர் விருந்தினர்களாக கலந்து கொண்டனர். திருமணத்துக்கு முன்னதாக பாரீஸ் சென்ற இந்த ஜோடி ஈபிள் கோபுரம் முன்பு பலவிதமான போட்டோக்களை எடுத்து மகிழ்ந்தனர்.