அகதி நிலையில் இருக்கும் பிரபல தடகள விளையாட்டு வீரர்கள், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அறிவித்துள்ளது.
இவர்கள் ஒலிம்பிக் கொடியின் கீழ் போட்டியிடுவார்கள்.
இது வரை இது போல அகதி நிலையில் இருக்கும் தடகள வீரர்கள் அவர்கள் சொந்த நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்த முடியவில்லை என்பதால் அவர்களால் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ள முடியாமல் இருந்தது.
ஐ.நா மன்ற பொதுச்சபையில் ஆற்றிய ஒரு உரையில் , சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர், தாமஸ் பேக், புதிய விதிகளின் கீழ் எந்தப் போட்டியாளர்கள் கலந்துகொள்ளத் தகுதி பெற்றவர்கள் என்பதை அடையாளம் காணுமாறு, உறுப்பு நாடுகளுக்குக் கோரிக்கை விடுத்தார்.