சீனாவில் தற்கொலைக்கு முயன்ற இளம் பெண்ணை புத்திசாலித்தனமாக செயல்பட்டு ஓட்டுநர் ஒருவர் காப்பாற்றிய திடுக்கிடவைக்கும் வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
கடந்த அக்டோபர் மாதம் 25-ம் திகதி கிழக்கு சீனாவின் தலைநகரான நான்ஜிங்கில் பாயும் நதியின் பலத்தின் கம்பியின் மீது ஒரு இளம்பெண் தற்கொலை செய்துக்கொள்ளும் நோக்கத்துடன் ஏறிக்கொண்டிருந்தார். அப்போது பாலத்தின் மீது பேருந்தை ஓட்டிக்கொண்டிருந்த பென்க்பெய் என்ற ஓட்டுநர், தற்கொலைக்கு முயன்ற அந்த பெண்ணை பார்த்துவிட்டார். உடனே நடுபாலத்தின் மீது பேருந்தை நிறுத்திவிட்டு வேகமாக சென்று அந்த பெண், நதியில் குதிப்பதற்கு சில நொடிகளுக்கு முன்பாக பிடித்துவிட்டார்.
ஆனால் அந்த பெண் அழுதுக்கொண்டு முரண்டு பிடித்த போதும் அவரை மற்றொருவரின் உதவியுடன் வலுக்கட்டாயமாக பேருந்தில் ஏற்றிவிட்டார். இந்த காட்சிகள் அனைத்தும் பேருந்தின் சி.சி.டி.வி. கேமிராவில் பதிவாகியுள்ளது. புத்திசாலித்தனமாக செயல்பட்டு ஒரு உயிரை காப்பாற்றிய அந்த ஓட்டுநருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.