டி.என்.எஸ். தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் கே.ஆர்.மணிமுத்து இயக்கத்தில் வெளியாக உள்ள ‘அபூர்வ மகான்’ திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருப்பது சாய்முரளி.
ஷீரடி சாய்பாபா மகிமைகளை எடுத்து கூறும் இந்த படத்தில் நடிக்க சாய்முரளி ஆறு மாதம் விரதம் இருந்து மிக சிறப்பாக நடித்துள்ளார். முரளிதரன் என்ற தனது பெயரை சாய் முரளி என மாற்றி முழு சாய்பாபா பக்தராகவே மாறிவிட்டார். அவர் மலேசியா சென்றும் படம் ரிலீஸ் ஆகும் வரை விரதம் இருந்து வருவதாக இயக்குனர் கே.ஆர்.மணிமுத்து கூறினார்.
சண்டைக் காட்சிகளில் இவரது ஆக்ஷனை பார்த்து படக்குழுவினர்களே ஆச்சர்யப்பட்டுள்ளனர். தற்போது இன்னொரு படத்திலும் நாயகனாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். ‘அபூர்வ மகான்’ படத்தில் ஷீரடி சாய்பாபா வேடத்தில் ‘தலைவாசல்’ விஜய் நடித்துள்ளார்.
மேலும், சுமன், அஜய் ரத்னம், டெல்லி கணேஷ், எம்.எஸ்.பாஸ்கர், பவர் ஸ்டார் சீனிவாசன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். தசி இசையமைக்கும் படத்துக்கு ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்த படம் சாய்பாபா ஜீவ சமாதி அடைந்த நாளில் ரிலீஸாக இருந்தது. ஆனால் திரையரங்குகள் கிடைக்காத காரணத்தால் வேறு தேதியில் வெளியாகிறது. விரைவில் அணைவருக்கும் சாய்பாபாவின் அருள் கிடைக்கும்.