ஜலந்தரில் உள்ள குருத்துவாராவில் ஹர்பஜன் சிங், கீதா பஸ்ரா திருமணம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. திருமண விழாவுக்கு சச்சின் டெண்டுல்கர், மனைவி அஞ்சலியுடன் வருகை தந்து வாழ்த்தினார்.
திருமணத்தின் போது, வீட்டுக்கு வெளியே நடந்த வைபவத்தை அங்கு குழுமியிருந்த சில புகைப்பட நிருபர்கள் தங்கள் கேமராவில் பதிவு செய்தனர். இதைப் பார்த்த பவுன்சர்கள் சிலர் நிருபர்களை தாக்கி, அவர்களது கேமராவையும் பிடுங்கி வைத்துக் கொண்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த நிருபர்கள் உடனடியாக அந்த இடத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர். இதைக் கேள்விப்பட்டு வெளியே வந்த ஹர்பஜன் சிங் நிருபர்களிடம் மன்னிப்பு கேட்டதையடுத்து அவர்களின் தர்ணா முடிவுக்கு வந்தது.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.