அதீத சந்தோஷத்தை வெளிப்படுத்த நாம் சில நேரங்களில் ஊளையிட முயற்சிப்பதுண்டு.
லேரி வுட்ஸ் என்கிற ஐந்து மாதக் குழந்தையின் தந்தை இரண்டு நாய்களை வளர்த்து வருகின்றார். இந்த நாய்களுக்குள் யார் மாவீரன்? என்பதுபோல அவ்வப்போது ஊளையிடும் போட்டி நடக்கும். அதில் தனது குழந்தையும் கலந்துகொண்டு தன் பங்குக்கு போட்டிப்போட்டு ஊளையிடுவதை வீடியோவாக பதிவு செய்து யூடியூபில் வெளியிட்டுள்ளார்.
நாய்களின் அளவுக்கு சத்தம் வரவில்லை என்றாலும், இந்த ஐந்து மாதக் குழந்தையின் ஊளையிடும் முயற்சி நிச்சயம் பாராட்டத்தக்கது.
இந்தக் குறும்பு வீடியோவை நீங்களும் கண்டுமகிழுங்கள்.