இஸ்ரேல் பிரதமா் நாஃப்டாலி பென்னட்டின் குடும்பத்துக்கு கடந்த மாதம் கொலை மிரட்டல் விடுத்த விவகாரத்தில், 65 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரை பொலிஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
பிரதமா் பென்னட்டின் குடும்பத்துக்கு கடந்த மாதம் தபால் மூலமாக தோட்டாக்களை அனுப்பி, கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. அதனைத் தொடா்ந்து, பிரதமருக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் பொலிஸாா் பாதுகாப்பை பலப்படுத்தினா். மிரட்டல் குறித்தும் விசாரணையை தீவிரப்படுத்தினா்.
இதில், மிரட்டலில் தொடா்புடையதாக மூதாட்டி ஒருவரை பொலிஸாா் கைது செய்துள்ளனா். இதுதொடா்பாக பொலிஸாா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘பிரதமா் குடும்பத்துக்கு மிரட்டல் விடுத்தது தெற்கு இஸ்ரேலில் குடியிருக்கும் ஒரு பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு சிறிய தேசியவாத கட்சியின் தலைவராக இருந்து வரும் நாஃப்டாலி பென்னட்டுக்கு யூத தேசியவாதிகள் அண்மைக் காலமாக கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். தனது சித்தாந்தத்தை பென்னட் கைவிட்டுவிட்டதாக அவா்கள் குற்றம்சாட்டி வருகின்றனா். இத்தகைய சூழலில் இந்தக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
முன்னதாக, இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே அமைதியை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்ட அப்போதைய பிரதமா் இட்ஷாக் ராபின், கடந்த 1995 ஆம் ஆண்டு யூத தேசியவாதிகளால் படுகொலை செய்யப்பட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.