‘பசி’ படத்தில் குணசித்திர வேடத்தில் நடித்து பிரபலமானவர் ‘பசி’ சத்யா. 1979-ல் இந்த படம் வெளியானது. ‘வீடு, மறுபடியும், மறுபக்கம், டூயட், தலைமுறைகள்’ உள்பட 120-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார்.
‘பசி’ சத்யா, வீட்டில் இருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை வடபழனியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவருக்கு வயது 62. ‘பசி’ சத்யாவுக்கு கிருஷ்ணன் என்ற கணவரும் விஜய சங்கர், சரவணன் என்ற மகன்களும் உள்ளனர்.