விடாது பெய்து வரும் மழையால் சென்னை நகரமே கவர்ச்சிகரமாக, படு அழகாக இருப்பதாக ஸ்ருதி ஹாசன் சிலிர்த்துக் கூறியுள்ளார்.
சென்னை நகரம் நடுநடுங்கிக் கொண்டிருக்கிறது குளிரில். நேற்று இரவு முதல் விடாமல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சென்னை நகரமே வெள்ளக்காடாகியுள்ளது.
ஊரே நடுங்கிக் கிடக்கிறது. மின்விசிறியைக் கூடப் போட முடியவில்லை. அப்படி குளிர்கிறது போட்டால்.
இந்த நிலையில் சென்னை நகரின் சீதோஷ்ணம் குறித்து ஸ்ருதி ஹாசன் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். அவர் போட்டுள்ள டிவிட்டில், Most gorgeous weather in chennai ! என்று கூறியுள்ளார்.