விஷாலின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் விஷால் பேசும்போது, நான் தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் ‘கதகளி’ படத்தில் நடித்து வருகிறேன். இப்படம் முடிந்த பிறகு லிங்குசாமி இயக்கத்தில் ‘சண்டக்கோழி 2’ம் பாகத்தில் நடிக்க இருக்கிறேன். மேலும் ஒரு படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகியிருக்கிறேன்.
நான் தற்போது இரண்டு வேலைகளை பார்த்து வருகிறேன். நடிக்கவும், நடிகர் சங்க செயலாளர் வேலையையும் பார்த்து வருகிறேன். இரண்டு வருடங்களுக்கு திருமணம் என்னும் பேச்சுக்கே இடம் இல்லை. நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்டுவது தான் என்னுடைய முழு எண்ணம். கட்டிடம் கட்டி முடித்தப் பிறகுதான் என்னுடைய திருமணம் நடக்கும்.
என்னுடைய திருமணம் பெற்றோர்கள் பார்த்து வைக்கும் திருமணமாக இருக்காது. நிச்சயம் காதல் திருமணம்தான். நான் யாரை காதலிக்கிறேன் என்பதை தக்க சமயத்தில் நானே அறிவிப்பேன்’ என்றார்.