ஐ.பி.எல். போட்டிகளில் கொல்கத்தா அணியின் உரிமையாளர்களில் ஒருவர் நடிகர் ஷாருக்கான். இவர் ஐ.பி.எல். அணியின் பங்குகளை விற்றதில் அன்னிய செலவாணி மோசடி நடந்தது தெரியவந்தது.
இது தொடர்பாக அவருக்கு பலமுறை சம்மன் அனுப்பப்பட்டும் அமலாக்க பிரிவு முன்பு ஆஜராகவில்லை. இந்த நிலையில் அவர், இன்று அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் முன்பு ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை செய்து வாக்குமூலம் பெற்றனர்.