தமிழ் திரையுலக பழம்பெரும் இயக்குனரான கே.எஸ். கோபாலகிருஷ்ணன் உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 86. கும்பகோணத்தில் பிறந்த கோபாலகிருஷ்ணன், தமிழ், மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட 70 படங்களை இயக்கி உள்ளார்.
கோபாலகிருஷ்ணன் பாடலாசிரியர், எழுத்தாளர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர். இவர் எழுதி இயக்கிய சாரதா(1962) சிறந்த படமாக தேசிய விருது பெற்றது, ஜெமினிகணேசன் நடித்த கற்பகம், ஆயிரம் ரூபாய், செல்வம் கண்கண்ட தெய்வம் குலமா குணமா, புண்ணியம் செய்தவள், ரவுடி ராக்கம்மா, அடுக்கு மல்லி, நன்றிக்கரங்கள், தேவியின் திருவிளையாடல், எனக்கொரு நீதி, காவிய தலைவன் உள்ளிட்ட 70 படங்களை இயக்கியுள்ளார்.
கை கொடுத்த தெய்வம் படத்திற்காக மத்திய அரசின் வெள்ளிப் பதக்கம் பெற்றுள்ளார். 1975 ஆம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருதும் வாங்கியுள்ளார். 1992ல் விஜயகாந்த் பானுப்பிரியாவின் ‘காவியத் தலைவன்’ படம்தான் அவரது கதை வசனத்தின் கடைசி படம்.