பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் கடந்த வெள்ளிக்கிழமை ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் தொடர்புடையவன் என சந்தேகிக்கும் நபரை தேடப்படும் குற்றவாளியாக போலீசார் அறிவித்துள்ளனர்.
சாலா அப்தெசலாம்(26) என்ற அந்த வாலிபர் மீது பெல்ஜியம் நாட்டு அரசு விடுத்துள்ள சர்வதேச பிடிவாரண்ட் நிலுவையில் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இந்நிலையில், பாரிஸ் தாக்குதலிலும் இவனுக்கு தொடர்பு இருப்பதாக போலீசாரின் விசாரணையில் தெளிவானது.
இதையடுத்து, சாலா அப்தெசலாம் எனப்படும் அந்த தீவிரவாதியை தேடப்படும் குற்றவாளியாக லண்டன் போலீசார் அறிவித்துள்ளனர்.