அனைத்து ஜீவராசிகளுக்கும் அன்னையான இயற்கை இசைக்கும் இனிய கீதத்தை எப்போதாவது கேட்டிருக்கிறீர்களா? எளிதில் உணர முடியாத அந்த இசையை குரோஷியா நாட்டைச் சேர்ந்த கட்டிடக்கலைஞரான நிகோலா பேசிக், அங்குள்ள சதார் கடற்கரையில் இசைக்கருவியைப் போன்ற கட்டிட வடிவமைப்பை உருவாக்கி அதில் 35 இசை தரும் குழாய்களை பொருத்தி இயற்கையின் இசைக்கு அற்புதமான வடிவத்தைக் கொடுத்துள்ளார்.
அலைகளின் வீச்சுக்கேற்ப இசைக்கும் இந்த இசையைக் கேட்டு சுற்றுலாப் பயணிகள் அந்த கடற்கரை ஓரத்திலேயே கண்ணயர்ந்து வருகின்றனர்.