இராக்கிய நகரான மோஸுலில் ஐ எஸ் அமைப்பின் பயங்கரவாதிகள் 12 மாணவர்களை கொன்றுள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.
இஸ்லாமிய அரசு என்று தம்மைக் கூறிக் கொள்ளும் அக்குழுவுக்கு எதிரான கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் அந்த மாணவர்கள் முன்னெடுத்தனர் என்று கூறப்படுகிறது.
அந்த மாணவர்களின் சடலங்கள் மோஸுலிலுள்ள சவக்கிடங்கில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு வட்டாரத் தகவல் ஒன்று தெரிவிக்கிறது.
மோஸுல் நகரே இராக்கில் ஐ எஸ் அமைப்பின் வலுவான தளமாக உள்ளது.
அந்நகரை கடந்த ஆண்டு அவர்கள் கைப்பற்றியது முதல், அங்கு தமது பாணியில் இஸ்லாமியச் சட்டங்களுக்கு மிகக் கடுமையன விளக்கங்களைக் கொடுத்து அதை நடைமுறைபடுத்தி வருகின்றனர்.
இஸ்லாமியர் அல்லாத பலரையும் அந்த அமைப்பினர் நகரைவிட்டு விரட்டி அடித்தனர்.