பலத்த மழையின் காரணமாக சென்னையின் புறநகர் பகுதிகளில் தேங்கிய மழைநீர் பெரும் வெள்ளம் போல காட்சியளிக்கிறது. மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களைப் புகைப்படம் எடுத்து சமுகவலைதளத்தில் நெட்டிசன்கள் பதிவேற்றிவருகின்றனர்.
சில நாட்களுக்கு முன்னர், விமானத்தில் உத்தரபிரதேசம் சென்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், விமானத்திலிருந்து சென்னை மாநகரைப் படம்பிடித்து முகநூலில் பதிவேற்றினார். மேலும் அவர் கூறியதாவது, “ மனதை வருத்தமுறச் செய்யும் வெள்ளத்திற்குப் பிறகு, சென்னை நோயுற்றதைப் போல தோற்றமளிக்கிறது” என்று குறிப்பிட்டிருந்தார்.
இதைத் தொடர்ந்து இப்போது, குஷ்பு, விமானத்திலிருந்து சென்னையைப் புகைப்படம் எடுத்து ட்விட்டரில் ட்விட் செய்துள்ளார். மேலும் கூறியதாவது, “ மிதமான சென்னை வெயில் என்னை வரவேற்கிறது. இருந்தாலும் சென்னை மக்கள் மழை நீரில் அவதிப்படுவதைப் பார்க்கும் போது என் இதயத்தை நொறுக்குகிறது”.
இவ்வாறு சென்னையின் அண்மைக்கால பெரும் துயரங்களைப் புகைப்படங்களாக ஆங்காங்கே பிரபலங்கள் வெளியிட்டுவருவது குறிப்பிடத்தக்கது.