சீனாவில் உறைபனிக்குள் மூழ்கியுள்ள சாலையோர மரங்கள் கண்ணைக் கவரும் வகையில் அமைந்துள்ளன.
குளிர்காலம் தொடங்கியதையடுத்து வடகிழக்கு சீனாவின் ஜிலின் மாகணத்தில் உள்ள சோங்குவா நதிக்கரையில் அமைந்துள்ள சாலையோர மரங்கள் உறைபனியால் நிறைந்துள்ளன.
சாலையின் இருபுறமும் உள்ள மரங்கள் முழுவதிலும் பனிபடர்ந்துள்ளது, பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. இப்பகுதிக்கு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முக்கியமான அம்சமாக இந்த சாலையோர மரங்களில் படரும் உறைபனி கருதப்படுகின்றது.
இதனைக் காண்பதற்காகவே, ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான மக்கள் இந்தச் சாலைகளை நோக்கி விசிட் அடிப்பது வழக்கமாம். தற்போது பனிபடரத் தொடங்கியுள்ளதையடுத்து சுற்றாலாவாசிகளின் கூட்டத்தால் ஜிலின் நகரப்பகுதி விரைவில் நிறையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.