இந்தோனேசியாவில் உள்ள அம்பான் தீவு அருகே நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.1 ஆகப் பதிவு ஆனதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் 174 கிலோ மீட்டர் தொலைவில் அம்பான் தீவின் அருகே கடலுக்கடியில் 75 கி.மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கியதால் பலர் பீதியடைந்து வீட்டை விட்டு வெளியேறினார்கள். ஆனால், தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு, சுனாமி குறித்து எச்சரிக்கை ஏதும் விடவில்லை. பாதிப்பு குறித்து உடனடித் தகவல் ஏதும் தெரியவில்லை.